Posts

Showing posts from May, 2018

டுமீல் தேசியம் சில குறிப்புகள்

2009 ஈழப் போருக்குப் பிறகு உருவாகி வந்த கருத்தியல் தான் ஆசீவக தமிழ் தேசியம். அது என்ன ஆ.த.தே? யூ ட்யூப் தவிர எங்கும் காணப்படாத இதன் விழியங்களுக்கு நான் பரம ரசிகன்...தமிழர்களுக்கு எதிராக எல்லோரும் சதி செய்கிறார்கள் கிட்டத்தட்ட ஒட்டு மொத்த உலகமுமே தமிழனுக்கு எதிரிகள் தான்.. உலகின் ஆதிப் பழங்கால தொல் இனம் தமிழினம் தான்... ஆதிப் பழங்கால தொல் குரங்கு பேசியது தமிழ் மொழி தான்... உலக மொழிகளுக்கு எல்லாம் ஆயா- ஸாரி தாய். திராவிட இயக்கம் பெரும் மக்கள் இயக்கமாக மாற முடிந்ததற்கு காரணம் அதற்கென்று ஒரு சிந்தனை அடித்தளத்தை அதன் முன்னோடிகள் அமைத்துத்  தந்ததுதான்... பிறகு தொடர்ச்சியாக பல சமரசங்களினூடாக பயணித்து பேரியக்கமாகி இன்று அதன் அந்திம காலத்தில் நிற்கிறது... இந்துத்துவ கருத்தியலை பொறுத்தவரையும் பெரும்பாலும் இதுவே உண்மை.... ஆனால் தமிழ் தேசியம் திராவிடத்தைக் காட்டிலும் பழமையானது தான் இருந்தாலும் கூட ஏன் அதனால் மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உருவாக முடியவில்லை? காரணங்கள் பல... அவற்றில் ஒன்று ஒரு குறிப்பிட்ட நிலையில் தமிழ் தேசியம் கேலிக் கூத்தாக மாறிவிடுவது தான்...அனைத்தையும் எங்கும் இல்லாத இலுமினாட...

நான் அறிந்த காந்தியர்கள்

நானறிந்த காந்தியர்கள் சிலரின் கருத்துக்கள் இவை(இவர்கள் கிராமங்களில் அந்த மக்களுடன் சேர்ந்து வாழ்பவர்கள் ஆகவே கிராமச் சூழலை நன்றாக அறிந்தவர்கள். 1. நவீன கழிப்பிடங்கள் தேவையில்லை. கிராமத்தில் எங்கோ ஒதுக்குப்புறமாக திறந்த வெளியில் மலம் கழிப்பதில் ஒரு பாதகமுமில்லை. மலம் கழித்த பிறகு மண்ணைப் போட்டு மூடி விட வேண்டும் அவ்வளவுதான். பிரச்சினை எங்கே வருகிறது என்றால் நகர் புறங்களில் நெருக்கடியான குடித்தனங்களில் போதிய கழிவறை வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் கழிக்கும் போது தான் நோய் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. 2. ஸானிடரி நாப்கின்கள் தேவையில்லை. உண்மையில் அவற்றை உபயோகித்து குப்பை தொட்டிகளில் கண்டபடி வீசப்படுகிறது. குப்பை அள்ளுபவரின் நிலையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காட்டன் துணியே போதுமானது. சரியாக கழுவி மீள் உபயோகம் செய்தால் சுகாதாரமானது தான். Time tested 3. மருத்துவ வசதி- மரபார்ந்த மருத்துவ முறைகளே நம் கிராம மக்களுக்கு ஏற்றவை.. ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகள் பலவும் மிகச் சமீப காலம்வரை நம் கிராமங்களில் பொதுவாக கிடைப்பதாக உள்ளது. 4. வாசின்கள் தேவையில்ல...